×

திருச்சி கலையரங்கத்தில் ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சி நாளை துவக்கம்

திருச்சி, மே 23:  திருச்சி கலையரங்கத்தில் நாளை (24ம்தேதி) துவங்கி 26ம் தேதி வரை ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஆட்டோமொபைல்ஸ் சங்கங்களின் தலைமை சங்கமான தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் அலைடு இன்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் கடந்த 1988 முதல் தமிழகத்தில் ஆட்டோமொபைல்ஸ் வர்த்தகம் செய்யும் வணிகர்களின் நலன் காக்க செயல்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல்ஸ் துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை எமது வணிகர்கள் வாகனங்கள் பழுது நீக்குவோர் மற்றும் வாகன உபயோகிப்போரும் அறிந்துகொள்ளும் பொருட்டு எங்கள் உறுப்பினர் சங்கங்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. திருச்சியில் 2006, 2010, 2015 ஆகிய ஆண்டுகள் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. அதேபோல இம்முறையும் கண்காட்சி நாளை (24ம் தேதி) துவங்கி 26ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.  கண்காட்சி நடத்துவதில் அனுபவம் பெற்ற திருச்சி ஆட்டோ பார்ட்ஸ் சங்கத்திடம் இப்பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சங்க தலைவர் முருகேசன் தெரிவித்தார். மேலும் கண்காட்சியில் பழைய வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. பேட்டியின்போது, நிர்வாகிகள் சண்முகவேல், ரவி, சிவக்குமார், சிதம்பரம், பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Automobiles Exhibition ,Trichy Art Gallery ,
× RELATED திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்...