×

திருப்பாலைக்குடியில் கால்நடை மருத்துவமனை பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், மே 23:  திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை திறக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியான திருப்பாலைக்குடியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதற்கு மருத்துவம் பார்க்க உப்பூர், சோழந்தூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. காரணம் திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக ஒரு கால்நடை மருத்துவமனை இல்லை என்பதால் தான். எனவே மாவட்ட நிர்வாகம் திருப்பாலைக்குடி, பழங்கோட்டை பால்குளம், சம்பை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நிரந்தர கால்நடை மருத்துவமனையை அமைத்து உரிய மருத்துவரை நியமனம் செய்ய கிராமப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Veterinary Hospital ,
× RELATED கோயம்பள்ளி கிராமத்தில் கால்நடை...