×

இளையான்குடி அருகே ஊரணியில் வாலிபர் அடித்து கொலை? உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

இளையான்குடி, மே 23: இளையான்குடி அருகே ஊரணியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் போராட்டம் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது. இளையான்குடி அருகே பகைவரைவென்றானை சேர்ந்தவர் குமார் மகன் விக்னேஷ்(22). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்  மாலை 6 மணியளவில், சக டிரைவர்களுடன் தாயமங்கலத்தில் உள்ள ஊரணியில் குளிக்கச் சென்றார். அப்போது சிறிது நேரத்தில் விக்னேஷ் இறந்துவிட்டதாக இளையான்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. விக்னேஷின் உடலை கைப்பற்றிய போலீசார், இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தகவலறிந்த விக்னேஷின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் மருத்துவமனையில் குவிந்தனர். விக்னேஷின் தலைப்பகுதியில் காயம் உள்ளது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். விக்னேசுடன் குளிக்கச் சென்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதன்பிறகே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால்,  நேற்று காலை 10 மணிக்கு சாலைமறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.   மாலை 4 மணிக்கு மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags : village ,Ianayankudi ,Relatives ,
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு