×

சேந்தமங்கலம் அருகே கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

சேந்தமங்கலம், மே 23:  சேந்தமங்கலம் அருகே கடத்தி செல்லப்பட்ட 14 வயது சிறுமியை மீட்ட போலீசார், தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர். சேந்தமங்கலம் அடுத்த சிங்களாந்தபுரத்தை சேர்ந்த விவசாயியின் 14 வயது மகள், அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடைக்கு சென்ற சிறுமி மாயமானார். அவரை அதே பகுதியை சேர்ந்த பிகாம் படித்து வரும் 18 வயது வாலிபர் கடத்திச் சென்றதாக, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், இருவரையும் தேடிவந்தார். இந்நிலையில் நேற்று காலை, ராசிபுரம் பஸ் நிலையத்தில் சிறுமியை விட்டு விட்டு, அந்த வாலிபர் தப்பியோடி விட்டார். தகவலறிந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து, அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும், தப்பியோடிய  வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Senthamangalam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை