×

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கல்யாண பெருவிழா

கொள்ளிடம், மே 23: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்றுயம்மை உடனாகிய சிவலோகதியாகராஜ சுவாமி தேவஸ்தானத்தில் திருஞானசம்பந் சுவாமிக்கும், தோத்திரபூரணாம்பிகைக்கும் திருக்கல்யாண பெருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை திருஞானசம்பந்தர் உபநயனம் பின்னர் திருவீதி வலம் வருதலும், அதனைத் தொடர்ந்து மாலை திருமுறைகள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருதலும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடந்தது.

தொடர்ந்து திருஞான சம்பந்த சுவாமிக்கும், தோத்திரபூரணாம்பிகைக்கும் நடைபெற்ற திருமண விழாவில், தாலி கட்டும் நிகழ்ச்சியும், பின்னர் தனுர் லக்னத்தில் மணக்கோலத்தில் வெள்ளிப்பல்லக்கில் திருவீதி வலம் வருதலும் நடைபெற்றது. நேற்று அதிகாலை மூல நட்சத்திரத்தில் பேரின்ப பேரளிக்கும் திருப்பதிகம் ஓதுதல் மற்றும் சிவஜோதி தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் சார்பில் தருமை ஆதினத்திற்கு சொந்தமான ஆச்சாள்புரம் சிவலோகதியாகராஜ சுவாமி தேவஸ்தானம் டிரஸ்டி ஸ்தானிகர் காறுபாறு சொக்கநாதம்பிரான் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Tags : Thirukanganasampanda Swamigal Thirukkalaiana Perumazhayil ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...