×

செல்போன் திருட்டுபோன விவகாரம் வாலிபரை அடித்துக்கொன்ற 4 பேர் பிடிபட்டனர்

கும்மிடிப்பூண்டி, மே 23: செல்போன் திருட்டு போன தகராறில் வாலிபரை அடித்துக்கொன்ற 4பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சச்சின்குமார்(23)  வேலை பார்த்து வந்தார். இவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் இவரது வீட்டின் அருகே ஓடிசாவைச் சேர்ந்த அஜய் உள்பட சில தொழிலாளர்களும் வாடகைக்கு வீடு எடுத்து வசிக்
கின்றனர்.இந்நிலையில் அஜயினுடைய செல்போன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போயுள்ளது. அதனை பக்கத்து வீட்டில் தங்கி இருந்த வடமாநில வாலிபரான ராஜேஷ் திருடியதாக கூறி அவருடன் அஜய் அவரது நண்பர் மஸ்தான் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் ராஜேசுக்கு ஆதரவாக  சச்சின்குமாரை பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அஜய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சச்சின் குமாரை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சச்சின்குமார் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார், அஜய், மஸ்தான், அர்ஜுன், ரமீத் ஆகிய நான்கு பேரை கைதுசெய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : affair ,
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...