×

தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

திண்டிவனம், மே 23: திண்டிவனம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம்  அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்த திருமலை மகன் சுரேஷ் (30). புதுவை  ஜிப்மரில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா  (24), கடந்த 12ம் தேதி ஏந்தூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். இது தொடர்பாக திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில்  வசித்து வரும் பவித்ராவின் தந்தை ரத்தினகுமார் பிரம்மதேசம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதில் என் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக  குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து போலீசார் பவித்ராவின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்  சுரேஷ் புதுச்சேரியில் செவிலியர் ஒருவருடன் கள்ளத்  தொடர்பு வைத்திருந்ததும், அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே  ஏற்பட்ட மோதலில் மனமுடைந்த பவித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் பவித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக சுரேஷ் மீது வழக்குப்பதிந்த பிரம்மதேசம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை