×

வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

பண்ருட்டி, மே 23: பண்ருட்டி அருகே மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீத்தாராமன் மகன் சதீஷ்பாபு (22). இவர் கடந்த 18ம் தேதி அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (26), சிரஞ்சீவி (24), அரவிந்த் (20), அருண்குமார் (21) ஆகிய 4 பேரும் அவரை வழிமறித்து கோயிலுக்குள் செல்லக்கூடாது என தடுத்தனர். இதில் அவர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தரப்பினர் சதீஷ்பாபுவை திட்டி கல்லால் தாக்கி உள்ளனர். இதுகுறித்து அவரது உறவினர் முத்துக்குமரன் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிந்து, சிலம்பரசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தார்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்