×

வீட்டுக்கு தீ வைப்பு தாய், மகள் தப்பினர்

வில்லியனூர், மே 23:    வில்லியனூர் அடுத்த செண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (55). இவர் பங்கூரில் உள்ள தனது மகள் முனியம்மாள் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தார். முனியம்மான் வீட்டின் எதிர்வீட்டில் வசிக்கும் அய்யப்பன் என்கிற மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோத பிரச்னை இருந்து வந்தது. கடந்த 16ம் தேதி முனியம்மாள், அவரது தாய் ராஜேஸ்வரியை அய்யப்பன் தாக்கியுள்ளார். பதிலுக்கு அவர்களும் அவரை தாக்கியுள்ளனர். அப்போது அய்யப்பன், வீட்டோடு வைத்து கொளுத்தி விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

மறுநாள் அதிகாலை முனியம்மாளின் வீடு தீப்பிடித்து எரிந்தது. உடனே தாயும், மகளும் வெளியே ஓடிச்சென்று தப்பினர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் வில்லியனூர் போலீசார் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து ராஜேஸ்வரி வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். அதில், வீடு தீப்பிடித்து எரிந்ததில் அய்யப்பன் மீது சந்தேகம் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து அய்யப்பன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்