×

களக்காடு அருகே 15 ஆடுகள் மாயம்

களக்காடு, மே 22: களக்காடு அருகே 15 ஆடுகள் மாயமானது. இந்த ஆடுகள் திருடப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வம் (45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கிடை அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு, இரவில் ஆடுகளை கிடையில் அடைப்பது வழக்கம். அதுபோல இரு நாட்களுக்கு முன்னர் இரவில் ஆடுகளை கிடையில் அடைத்தார். மறுநாள் காலையில் பார்த்த போது அவரது கிடையில் இருந்த 15 ஆடுகள் மாயமாகியிருந்தது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஆடுகள் திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalakkadu ,
× RELATED சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு