தாரமங்கலம், மே 22: தாரமங்கலம் அருகே அமரகுந்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 1984-85ம் ஆண்டு, 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தாரமங்கலம் அருகே அமரகுந்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 1984-85ம் ஆண்டு, 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம், பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் ஜெயக்குமாரி, தமிழ்செல்வி, பருவதம், லட்சுமி. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். முருகன் தலைமை வகித்தார். குமார் முன்னிலை வகித்தார். ஆனந்த்தன், சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர். விழாவில், முன்னால் மாணவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு, பழைய நினைவுகளை நெகில்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில், மரம் கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில், கோவிந்தராஜ், சத்தியமூர்த்தி, சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீனிவாசன், வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.