×

இலங்கை போரில் பலியான தமிழர்களுக்கு நினைவஞ்சலி

ஈரோடு, மே 22:  இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகள் மீது இலங்கை ராணுவம் நடத்திய போரில்  லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியானார்கள். இதில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாநில துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்று, இலங்கை போரில் பலியான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திராவிட விடுதலை கழக ரத்தினசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன். மக்கள் சிவில் உரிமைக்கழக கணகுறிஞ்சி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

Tags : Tamils ,war ,Sri Lanka ,
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்