×

புதுச்சத்திரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் ; ஓமலூர் கிளீனர் கைது

சேந்தமங்கலம், மே 22:  நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து டிப்பர் லாரிகளில் மணல் கடத்துவதாக எஸ்.பி. அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் மேம்பாலம் அருகே, நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை, போலீசார் நிறுத்தினர்.  ஆனால், டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதையடுத்து, போலீசார் லாரியை துரத்திச்சென்று, சிறிது தூரத்தில் மடக்கிப் பிடித்தனர். டிரைவர் கீழே இறங்கி தப்பியோடிவிட்டார். கிளீனரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த அர்ஜூனன்(50) என்பதும், மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அர்ஜூனனை கைது செய்தனர். தப்பியோடிய டிரைவர் பழனிசாமியை, போலீசார் தேடி வருகின்றனர். 

Tags : newborn ,Omalur ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!