தேன்கனிக்கோட்டை, மே 22: தேன்கனிக்கோட்டை அருகே ஏணிபண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(55). கூலி தொழிலாளியான இவரது மனைவி பச்சையம்மா(45). இவர்களுக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் விறகு வெட்டும் அரிவாளால் பச்சையம்மாவின் வலதுகை மணிகட்டில் வெட்டியுள்ளார். இதுகுறித்து அவரது மகன் முத்து(28) கொடுத்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனர்.