×

பளுதூக்குதல் மையத்தில் சேர விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, மே 22:    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலூர் சத்துவாச்சாரியில் 2019-20ம் ஆண்டில் பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 7, 8, 9, 11ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு பயில உள்ள பளுதூக்குதல் விளையாட்டில் திறமைமிக்க மாணவ, மாணவிகள் தகுதியின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கு வரும் 23ம் தேதி கடைசி நாளாகும். 2019-20ம் ஆண்டில் பளுதூக்குதல் விளையாட்டிற்கு மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வுக்குழு உறுப்பினர்களை கொண்டு வேலூர் சத்துவாச்சாரியிலில் உள்ள பளுதூக்குதல் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் வரும் 30ம் தேதி காலை 8 மணிக்கு மாநில அளவிலான தேர்வு நடத்தப்படவுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  


Tags : Weight Loss Center ,athletes ,
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...