×

பணிக்கு சென்றவர் பாதி வழியில் பலி

விருதுநகர், மே 22: விருதுநகரில் கொத்தனார் வேலைக்கு சென்றவர் பாதி வழியில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் கொத்தனார் வேலை செய்யும் சங்கரேஸ்வரன் (50). இவர் நேற்று காலை பணிக்காக பாண்டியன் நகரில் இருந்து விருதுநகர் மாரியம்மன் கோயில் அருகே வந்து பணிக்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : housewife ,
× RELATED வருகிற 28ம் தேதி ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா