×

சாலை விபத்தில் முதியவர் பலி இளைஞர்கள் இருவர் காயம்

சாத்தூர், மே 22: சாத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் முதியவர் பலியானார். இளைஞர்கள் இருவர் காயமடைந்தனர். சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கோவில்பட்டியை சேர்ந்த மார்த்தாண்டம் மகன் சுப்புராஜ்(29), அருணச்சலம் மகன் சரவணன்(27) இருவரும் சிவனைந்தபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, சாலையை கடக்க முயன்ற 50 வயது மதிக்கதக்க பெயர் தெரியாத முதியவர் மீது மோதியதில் முதியவர் சம்பவஇடத்தில் பலியானர். இந்த விபத்தில் டூவீலரில் வந்த இளைஞர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : road accident ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு