×

தபால் அனுப்பும் போராட்டம்

சிவகங்கை, மே 22: காளையார்கோவில் அருகே அழகாபுரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக கவர்னர் உத்தரவிடக்கோரி அழகாபுரி போஸ்ட் ஆபீசில் தபால் போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் அருண்குமார் தலைமையில் அழகாபுரியில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாவட்ட தலைவர் சுரேஸ், ஒன்றிய செயலாளர் ஓம்பிரகாஷ், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம்