×

கிணற்றில் விழுந்த முதியவர் பலி

காரைக்குடி, மே 22:  காரைக்குடி அருகே பள்ளத்தூர், கீழ குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி (65). இவர் நேற்று முன்தினம் வீட்டின் கிணற்றின் மீது ஏறி முருங்கைக்காய் பறித்துள்ளார். அப்போது முருங்கை மரத்தின் கிளை ஒடிந்து, ராமசாமி நின்றிருந்த கிணற்றின் மேல் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் விழுந்து ராமசாமியும் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். ராமசாமி கிணற்றில் விழுந்ததை அறியாத குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். நேற்று கிணற்றுக்குள் பார்த்தபோது ராமசாமி இறந்து மிதந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலPசார் வழக்குg;பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : well ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை