×

லாரி மோதி டூவீலரில் சென்றவர் பலி

மதுரை, மே 22:  மதுரையில் லாரி மோதி டூவீலர் சென்ற ஒருவர் பலியானார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (40), சம்பவத்தன்று வில்லாபுரம் மெயின்ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, அவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன், படுகாயத்துடன் துடித்துக்கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து மதுரை நகர் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார்      வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : Larry ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி