×

பொன்னமராவதியில் சேதமடைந்த அரசு அலுவலர் குடியிருப்புகளை அகற்றி புதிதாக கட்ட வேண்டும்

பொன்னமராவதி, மே 22:  பொன்னமராவதியில் இடிந்த நிலையில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பு வீடுகளை அப்புறப்படுத்தி புதிதாக கட்ட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி- உலகம்பட்டி சாலையில் காவல் நிலையம் மேற்குபுறம் அருகில் நாட்டுக்கல் சாலையில் அரசு அலுவலர்கள் குடியிருக்க ஓட்டு வீடுகள் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தது. நாளைடையில் இந்த வீடுகளில் அதிக அளவில் குடியிருப்பதில்லை. ஒரு சில அலுவலர்கள் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் பெரும்பாலான வீடுகள் இடிந்துள்ளது. எனவே நகரின் மைய பகுதியில் சுகாதார கேடுகள் விளைவிக்கும் விதமாக இடிந்தும், கழிவுநீர் தேங்கியும் கிடப்பதை அப்புறப்படுத்தி அரசு அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Officer ,dam ,Ponnaravarai ,building ,
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...