×

அரசு பணியாளர்கள், பொதுமக்கள் வலியுறுத்தல் அறந்தாங்கி காவல் நிலையத்தில் பால்வள துறை அமைச்சர் மீது மக்கள் நீதிமய்ய நிர்வாகி புகார்

புதுக்கோட்டை, மே 22: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மக்கள் நீதிமய்யம் கட்சியின் பொறுப்பாளர் வைரவன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்ததேர்தலின்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி   பதவி பிரமாணத்தின் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு விரோதமாக மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தலைவர் கமலஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த அமைச்சர் மீது பால் கலப்பட விவகாரத்தில் கோர்ட் பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளது. அத்துமீறி தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து பேசிய அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Public Defender ,Ministry of Milk ,Police Station ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...