×

வாக்கு எண்ணிக்கையையொட்டி மருத்துவக்கல்லூரி பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை, மே 22: நாளை நடக்க இருக்கும் வாக்கு எண்ணிக்கையையொட்டி, மதுரை மருத்துவக்கல்லூரி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை நகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியிருப்பதாவது: மதுரை மக்களவைத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணி, மதுரை மருத்துவக்கல்லூரியில் நாளை நடக்கிறது. இதனையொட்டி, கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அண்ணா பஸ்நிலையம் திருவள்ளுவர் சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகச் சாலை வழியாக, கலெக்டர் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணி சார்ந்த அரசு அலுவலர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர். அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள், கட்சி முகவர்கள் மற்றும் தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் தமுக்கம் மைதானச் சாலை மற்றும் டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த 3 சாலைகள் வழியாக செல்வோர் தங்களது வாகனங்களை போலீசாரால் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும்.

அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் ஆகியோர் தமுக்கம் சாலை, தங்கராஜ் சாலை மற்றும் சட்டக்கல்லூரிக்கு எதிரே உள்ள சாலை ஆகிய சாலைகளின் வழியாக வந்து, தமுக்கம் மைதானம் வாகன நிறுத்தத்தில தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மற்றும் அதனைச் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் திருவள்ளுவர் சிலை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக வந்து வாகனங்களை அதே கலெக்டர் அலுவலக சாலையில், மருத்துவக் கல்லூரி காம்பவுண்டை ஒட்டி அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கள் வாகங்களை நிறுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 23 காலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மேற்கண்ட 3 சாலைகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : college area ,
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...