×

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

மதுரை, மே 22: மதுரை சென்ட்ரல் காய்கறி மார்கெட் எதிரே சுந்தரம் பூங்கா உள்ளது. இங்கு நேற்று மாலை உசிலம்பட்டி சடைச்சிபட்டியைச் சேர்ந்த அர்ஜூனன் (34), அதே ஊர் கிழக்கு தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி சித்ரா (30) ஆகியோர் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார் உடல்களை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை