நாகை,மே 22: நாகையில் ஓட்டுநர் உரிமம் இன்றி இயங்கிய 10 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று பறிமுதல் செய்தனர். நாகையில் அதிக அளவில் பயணிகள் ஏற்றிச்செல்வதாகவும், ஓட்டுநர் உரிமம் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும் கலெக்டர் சுரேஷ்குமாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து ஆர்டிஓ அழகிரிசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று சோதனை நடத்தினர். இதில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிவந்த ஆட்டோக்கள், ஓட்டுநர் உரிமம் இன்றி இயங்கிய ஆட்டோக்கள் என்று 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.