×

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

நாகை, மே 22: நாகை மக்களவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாளை (23ம் தேதி) அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நாகை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (23ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி டாஸ்மாக் கீழ் செயல்படும் அனைத்து மதுபானகடைகளும், மது கூடங்குகளும், உரிமம் பெற்று ஓட்டல்களில் செயல்படும் அனைத்து பார்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : holidays ,shops ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி