நாகை, மே22: தினகரன் செய்தி எதிரொலியால் நாகை நீலாமேல வடம்போக்கித் தெருவில் கடந்த சில மாதங்களாக தேங்கியிருந்த கழிவு நீர் நேற்று அகற்றப்பட்டது. நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் மக்கள் அதிகம் வசிக்கும் வார்டு 26வது வார்டு ஆகும். இதற்கு காரணம் இந்த வார்டு நாகை நகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடைகள், குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. அப்படியிருந்தும் இந்த 26வது வார்டிற்கு உட்பட்ட நீலா மேல வடம்போக்கித் தெருவில் கடந்த சில மாதங்களாகவே கழிவு நீர் செல்லும் வாய்க்கால் சுத்தம் செய்யாமல் நாகை நகராட்சி மெத்தனமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவுவதாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரிவிக்கின்றனர். இதற்கு அடிப்படை காரணம் நாகை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையே ஆகும் என்று தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் வெளிவந்தது.