×

ராஜிவ் காந்தி நினைவு நினைவு காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்

செங்கல்பட்டு, மே 22: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பேரணி செங்கல்பட்டில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் இருந்து, ராட்டின கிணறு ராஜிவ் காந்தி சிலை வரை, காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றனர். காங்கிரஸ் கட்சி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சி மாநில எஸ்சி பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, மாநில செயற்குழு உறுப்பினர் புத்தன், மாவட்ட பொதுச்செயலாளர் பெருமாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பேரணியில் கலந்துகொண்டனர். மேலும் ராஜிவ் காந்தி சிலையின் முன்பு மெழுகு வர்த்தி ஏற்றி தீவிரவாதத்திற்கு எதிரான உறுதி மொழியை ஏற்றனர். இதில் நகர தலைவர் தனசேகரன், வட்டார தலைவர் அன்பு, மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், குமரவேல், முருகன், உமாபதி, பார்த்தசாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம்: ஆண்டு தோறும், மே 21ம் தேதி ராஜிவ் காந்தி நினைவு தினத்தை கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி  காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ராஜிவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஜி.வி.மதியழகன் ராஜிவ் காந்தி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதில், நகர தலைவர் இராம. நீராளன்,  மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன், பச்சையப்பன், சடையாண்டி, வீரபத்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் லோகநாதன், குமார் வட்டாரத் தலைவர்கள் சம்பத், சுகுமார், நகர துணைத் தலைவர்கள் கருணாமூர்த்தி, குப்புசாமி, பழனி, சந்தானம், ராமலிங்கம், பவுல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சாலவாக்கத்தில் நடந்த நினைவுதின நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் சாலவாக்கம் உசேன் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார். அவருடன், காவணிப்பாக்கம் முன்னாள் தலைவர் சீனுவாசன், சிறுமயிலூர் முரளி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் நஜீம் உள்பட பலர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Rajiv Gandhi Memorial Memorial Congress ,procession ,
× RELATED மேலூர் அருகே வல்லடிகாரர் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு