×

ரயிலில் இருந்து விழுந்த மாணவர் சாவு

கோவை, மே 21: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் பயாஸ் அகமது. இவர் மகன் முஜிப் அகமது (18). பிளஸ் 2 மாணவர். இவர், வேலூர் ஜோலார் பேட்டையில் பணியாற்றும் தனது தந்தையை காண ரயிலில் சென்று கொண்டிருந்தார்.இவரது தங்கை அதே ரயிலில் மகளிர் பெட்டியில் பயணம் செய்தார். பொது பெட்டியில் படுக்கட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த முஜிப் அகமது போத்தனூர் ரயில் நிலையம் அருேக ரயில் வந்த போது தவறி விழுந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரும் போது இறந்தார். போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...