×

தேசிய கூடைப்பந்து இறுதி போட்டி கேரளா-தமிழ்நாடு அணிகள் இன்று மோதல்

கோவை, மே 21: கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இன்று நடக்கும் இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் கேரளா-தமிழ்நாடு அணிகள் மோதுகிறது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான 36வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவையில் கடந்த 14ம் தேதி துவங்கியது. லீக் ஆட்டங்கள் முடிவு பெற்ற நிலையில், நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தது. இதில், பெண்கள் பிரிவில் நடந்த முதல் அரையிறுதியில் கேரளா, பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் கேரளா அணி 74 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு, ராஜஸ்தான் அணிகள் மோதின.

இதில், தமிழ்நாடு அணி 57 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இன்று மாலை நடக்கும் இறுதி போட்டியில் தமிழக-கேரளா அணிகள் மோதுகிறது. ஆண்கள் பிரிவு முதல் அரையிறுதியில் கேரளா, ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் கேரளா அணி 65 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் ஹரியானா, கர்நாடக அணிகள் மோதின. மிகவும் பரபரப்பான இப்போட்டியில் ஹரியான அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதை தொடர்ந்து இன்று நடக்கும் ஆண்கள் இறுதிப்போட்டியில் ஹரியானா- கேரளா அணிகள் மோதுகின்றன.

Tags : match ,National Basketball Final ,teams ,Kerala ,Tamil Nadu ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக்...