×

தாலுகா வளாகத்தில் பூட்டி கிடக்கும் கட்டிடங்கள் குடிமகன்கள் அட்டகாசம்

ஈரோடு, மே 21:   ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் பூட்டி கிடக்கும் பழைய கட்டிடங்கள் தற்போது குடிமகன்களின் கூடாரமாக மாறி வருவதால் பெண்களும், பொதுமக்களும் பீதியடைந்து வருகின்றனர். ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், இ-சேவை மையம், மாநகராட்சியின் கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதன் காரணமாக காலை முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள். தற்போது தாலுகா அலுவலக வளாக பகுதியில் காலாவதியான கட்டிடங்கள் பூட்டி கிடக்கின்றன்.

இதனை குடிமகன்கள் இரவு நேரத்தில் மது அருந்தும் கூடாரமாக மாற்றியுள்ளனர். இதில் பகல் நேரத்தில் ஒரு சில நபர்கள் ஆங்காங்கே மறைவிடத்தில் அமர்ந்து கொண்டு போதை பொருட்களை பயன்படுத்தி தாலுகா அலுவலக வளாக பகுதியில் உலா வருகின்றனர். இந்த போதை ஆசாமிகளால் ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு வரும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தாலுகா அலுவலகத்திற்கு பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வர அந்த பகுதியில் உலா வரும் போதை ஆசாமிகளை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும். இந்த பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : buildings ,campus ,Taluk ,
× RELATED தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்