×

பெட்டிக்கடையில் மது விற்ற இருவர் கைது

சாத்தூர், மே 21:  சாத்தூர் அருகே பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். சாத்தூர் அருகே நல்லமுத்தன்பட்டி பஸ் ஸ்டாப்பில் உள்ள பெட்டிக்கடை அருகே வைத்து மது  விற்ற அதே கிராமத்தை சேர்ந்த முனியசாமி(45) என்பவரையும், ஒத்தையால்  கிரமத்தில் வைத்து மது விற்ற கருப்பசாமி(70) என்பவரையும்  கைது செய்த  சாத்தூர் தாலுகா போலீசார் இருவரிம் இருந்து சுமார் 25 மது பாட்டில்களை  பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...