×

கள்ளிமந்தையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஒட்டன்சத்திரம், மே 21: ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் உள்ளது திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளி. இங்கு கடந்த 2003- 2004ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை வகிக்க, தலைமையாசிரியர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். அனைவரையும் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலர் பிரபாவதி, மருத்துவர் முத்துச்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : meeting ,Kallayamandam ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்