×

சத்திரப்பட்டி அருகே கார் மீது பஸ் மோதல்: மெக்கானிக் பலி

பழநி, மே 21: சத்திரப்பட்டி அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். பழநி அருகே தாசிரிபட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (34). தனியார் பஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை நண்பர்களான நெய்க்காரப்பட்டியை சேர்ந்த கார்த்திக், காவலப்பட்டியை சேர்ந்த சதீஷ் ஆகியோருடன் தனது காரில் தாசிரிபட்டியில் இருந்து பழநி நோக்கி வந்தார். காரை சரவணக்குமார் ஓட்டி வந்தார். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, சத்திரப்பட்டி பெரிய பாலம் அருகே வந்தபோது பழநியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் கார் மீது மோதியது. இதில் சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கார்த்திக், சதீஷ் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான சரவணக்குமாருக்கு சோபனா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Tags : carpenter ,mechanic ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி