×

வேலூர் அரசு விளையாட்டு விடுதியில் சேர பளுதூக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு

மதுரை, மே 21: வேலூர் அரசு விளையாட்டு விடுதியில் சேர பளுதூக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை உள்பட 6 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.  தமிழகத்தில் பளுதூக்கும் விளையாட்டில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  சாதனை புரிந்து வருகின்றனர். இதனையொட்டி வேலூரில் முதன்மை நிலை விளையாட்டு மையம் உருவாக்கப்படுள்ளது. இங்குள்ள அரசு விடுதியில் சேர்வதற்கு பளுதூக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 7,8,9 மற்றும் 11ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாமாண்டு பயில உள்ள விளையாட்டு திறமை மிக்க மாணவ, மாணவிகள் தகுதியின் அடிப்படையில் பளுதூக்குதல் விளையாட்டுகளில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த வாய்ப்பை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது குறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் அரசு விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் ஆன்லைன் வாயிலாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தியான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 29ம் தேதி கடைசி. விண்ணப்பம் வழங்கியவர்கள் வருகிற 30ம் தேதி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்குதல் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vellore Government Sports Opportunity ,
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்