×

மும்பையில் விருது வழங்கல் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை

கழிவுநீர் ஓடும் சாலை...
உசிலம்பட்டி, மே 21: உசிலம்பட்டி அருகே, அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் முத்துராம் (65). இவர், உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டி சாலையில் உள்ள மாரிச்சாமி மகன் மெட்ரோமுத்து (50) என்பவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கமாக கொடுத்தார். பணத்தை திரும்ப கேட்டபோது, மெட்ரோமுத்து செக் ஒன்றை கொடுத்துள்ளார். அதை வங்கியில் போட்டபோது பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. இது தொடர்பாக 2016 ஜூலை 9ல் உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில், மெட்ரோமுத்து மீது முத்துராமன் வழக்கு தொடுத்தார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன், ‘செக் மோசடி குற்றத்திற்காக மெட்ரோமுத்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் முத்துராமனிடம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Tags : Czech ,Mumbai ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!