மேலூர், மே 21: மேலூர் மண்கட்டி தெப்பக்குளத்தை சேர்ந்தவர் சேக்ஜின்னா (45). மனைவி ஆமீனாபேகம். மூன்று பிள்ளைகள் உள்ளனர். சேக்ஜின்னா சவுதி அரேபியாவில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்கு நோன்பு இருந்து வந்தார். நேற்று முன்தினம் சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் சேக்ஜின்னா பலியானார். ரமலான் மாதம் முடிந்த பின்னரே, உடலை இந்தியாவிற்கு அனுப்ப முடியும் என சவுதி அரசு தெரிவித்ததாக சேக்ஜின்னா உறவினர்கள் தெரிவித்தனர்.