×

சேந்தமங்கலம் பகுதியில் வைகாசி விசாக விழா கொண்டாட்டம்

சேந்தமங்கலம், மே 21: சேந்தமங்கலம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேந்தமங்கலம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தத்தகிரி முருகன் கோயில் மற்றும் பச்சுடையான்பட்டி மண்மலை, கருங்கல்பாளையம், காளப்பநாயக்கன்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சனம், சந்தனம் மற்றும் பல்வேறு வகையான வாசனை  திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தில் செய்திருந்தனர்.

Tags : Celebration ,Vaikasi ,area ,Senthamangalam ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்