×

நாமக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 650 போலீசார்

நாமக்கல், மே 21:  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் வரும் 23ம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி அருளரசு கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23ம் தேதி ஒரு ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 109 எஸ்ஐகள் மற்றும் போலீசார் என மொத்தம் 650 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் 300 பேர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் 300 பேரும் மற்ற போலீசார் மையத்தின் வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அரசியல் கட்சியினர், உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி மருத்துவமனை முன்புறம் என இரண்டு இடங்களில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும், மையத்துக்குள் செல்லும் அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இவ்வாறு எஸ்பி அருளரசு தெரிவித்தார்.

Tags : constituency ,Namakkal ,security personnel ,
× RELATED தி.கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு