×

பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, மே 21: திருச்சி கே.கே.நகர், ஜேகே நகர் கணபதி கரை சேர்ந்தவர் மேகலா (38). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மேகலா, திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உள்ள தார் குடோனில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை