×

சீட்டு பணத்தை தராமல் மோசடி பெண் கைது

திருச்சி, மே 21:  திருச்சி பொன்மலைப்பட்டி முல்லைநகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மனைவி அருள்மேரி (45). இவர் சிட்பண்ட் மற்றும் தீபாவளி பண்ட் நடத்தி வருகிறார். இவரிடம் பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்த உமாமகேஸ்வரி (50) என்பவர் கடந்தாண்டு சீட்டு போட்டிருந்தார். மேலும் தீபாவளி பண்ட்டுக்கு ரு.1 லட்சம் வரை அளித்திருந்தார். சீட்டு பணம் ரூ.1.75 லட்சம் மற்றும் தீபாவளி பண்ட் உள்பட ரூ.2.75 லட்சம் வரை பணம் கட்டியிருந்த நிலையில் அவசர தேவைக்காக உமாமகேஸ்வரி பணம் கேட்டுள்ளார். அதில் ரூ.35 ஆயிரம் மட்டும் கொடுத்த நிலையில் மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பலமுறை கேட்டும் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்ககோரி மாநகர துணை கமிஷனரிடம் உமாமகேஸ்வரி புகார் அளித்தார். துணை கமிஷனர் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து அருள்மேரியை கைது செய்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Fraudster ,
× RELATED பேஸ்புக்கில் மோசடி வாலிபர் கைது