×

தி.பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் மின் விளக்கு இல்லாததால் பயணிகள் அச்சம், பீதி

திருத்துறைப்பூண்டி, மே 21: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் திருத்துறைப்பூண்டி வக்கீல் நாகராஜன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திற்கு தினசரி பகலிலும் இரவிலும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும், பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால் பேருந்து நிலையத்தில் சாலையில் தெருவிளக்குகள் இல்லை. கடைகள் திறந்து இருக்கும்போது வெளிச்சம் தெரிகிறது. கடைகள் மூடப்பட்ட பிறகு விளக்கு வெளிச்சம் இல்லாமல் பேருந்து நிலையம் இருட்டாக உள்ளது. ஏற்கனவே பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் அச்சத்தில் உள்ளனர். தற்போது இரவு 10 மணிக்குமேல் விளக்கு வெளிச்சம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் பயந்துள்ளனர். இதனால் திருட்டு பயமும் உள்ளது. இது குறித்து மாவட்ட நுகர்வோர் மையத்திற்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்து உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : bus station ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்