×

பெண் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, மே 21: பூதலூர் அருகே எலிபேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். பூதலூர் அடுத்த ராயந்தூர் காலனித்தெருவை சேர்ந்த கொத்தனார் செல்வகுமார் (38). இவரது மனைவி மாதவி (31). இருவருக்கும் திருமணம் நடந்து 14 ஆண்டுகளாகிறது.ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாதவி கடந்த 9ம் தேதி இரவு வீட்டிலிருந்த எலிபேஸ்ட் விஷத்தை சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து 11ம் தேதி தனது கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பூதலூர் போலீசாரிடம் செல்வகுமார் தனது மனைவிக்கு மூச்சுத்திணறல் அடிக்கடி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்து எலிபேஸ்ட் சாப்பிட்டதாக நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை