×

உலக நன்மை வேண்டி யோக நரசிம்மருக்கு கோடை அபிஷேகம்

கும்பகோணம்,மே 21: கும்பகோணத்தை அடுத்த நரசிங்கன்பேட்டையிலுள்ள யோக நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழாவும்,  காரியசித்தி ஆஞ்சநேயருக்கு கோடை அபிஷேகம் விழா நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும்,கோடை காலத்தில் நோய்கள் இல்லாமல் மக்கள் வாழவேண்டிவருடந்தோறும் கோடை அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி காலை 9 மணிக்கு மகா சங்கல்பமும், கடஸ்தாபனமும் 10 தொடர்ந்து கருடன், ஆஞ்யநேயர், யோக நரசிம்மருக்கு சிறப்பு கோடை அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. மாலை காரியசித்தி ஆஞ்யநேயருக்கு வெண்ணெய் அலங்காரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Yoga Narasimha ,world ,
× RELATED சில்லி பாயின்ட்…