×

தாய், தங்கையை தாக்கிய தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

கும்பகோணம், மே 21: கள்ளக்காதலை தட்டி கேட்ட தாய், தங்கையை தாக்கிய தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை கருப்பூரை சேர்ந்த கொத்தனார் ரவி (47).  இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் பூவரசன் (22) என்ற மகன் உள்ளனர். தனியார் ஜவுளி கடையில் ரவி வேலை பார்த்து வருகிறார். ரவிக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதுகுறித்து ரவியிடம் அவரது மனைவி, மகள் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்து மனைவி மற்றும் மகளை ரவி தாக்கினார். தாய், தங்கையை தாக்கியதை பார்த்து தந்தை ரவியை அவரது மகன் பூவரசன் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து பூவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...