×

புதுக்கோட்டை அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி பொதுமக்கள் திடீர் மறியல்

புதுக்கோட்டை, மே 21: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் சிற்றரசு மகன் ஜீவானந்தம்(37). இவர் கோயிலூரில் இருந்து வம்பனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது வம்பன் அருகே எதிரே சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி சென்றார். அப்போது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து,  இதனையடுத்து இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இதனால் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
பின்னர் இறந்த ஜீவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Lorry ,teenager ,Pudukottai ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...