×

மைனர் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் போக்சோவில் கைது

பாடாலூர், மே 21: பாடாலூர் அருகே மைனர் பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆலத்தூர் தாலுகா  திம்மூர் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது சகோதரர், குன்னம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரி–்ல் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பெண், திருப்பூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அந்த பெண்ணை அழைத்து வரச் சென்றனர். அப்போது அந்த பெண்ணை குன்னம் தாலுகா பரவாய் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மகன்  கார்த்திக் (18) என்பவர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து குன்னம் போலீசார், மைனர் பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்றதாக கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Minor ,
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...