×

குறுவை சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் கால்நடைகள் போகாமல் தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி, மே 21: குறுவை சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் ஆடு, மாடுகள் போகாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈச்சங்குடி விவசாயிகள் நல சங்கத் தலைவர் துரைராஜ் கூறியதாவது, ஈச்சங்குடி பகுதியில் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டு பயிர்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆடுகள் மேய்ந்து பயிர்கள் சேதமடையும் நிலையில் உள்ளது. மேலும் பயிர்கள் எலிவெட்டி நேரம் என்பதால் எலியை ஒழிக்க மருத்து அடிக்கும் சூழ்நிலை உள்ளது. அந்த மருந்தால் ஆடு, மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையும் ஏற்படலாம். எனவே கிராம மக்கள் தங்களுடைய ஆடு, மாடுகளை வயலுக்கு வராமல் பார்த்து கொள்ளுமாறு விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.


Tags :
× RELATED வேதாரண்யம் அருகே வாராஹிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம்