×

அக்கரைப்பேட்டையில் தந்தை திட்டியதால் மகள் தற்கொலை

நாகை, மே21: நாகையில் தந்தை திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்த மகள் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த முனியப்பன்-அஞ்சம்மாள் தம்பதியின் மகள் ராகப்பிரியா(14). 9ம் வகுப்பு மாணவி. இந்நிலையில் முனியப்பன் தனது மகளிடம் அடிக்கடி விளையாட வெளியில் செல்லாமல் நல்லமுறையில் படிக்கும்படி கூறி திட்டினார். இதில் மனமுடைந்த ராகப்பிரியா கடந்த 13ம் தேதி வீட்டின் பின்புறம் சென்று மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ராகப்பிரியா நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ராகப்பிரியாவின் தாய் அஞ்சம்மாள் நாகை டவுன் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Daughter suicides ,
× RELATED காதலுக்கு தந்தை எதிர்ப்பு மகள் தற்கொலை