×

கரூர் தாலுகா அலுவலகம் அருகே வேகத்தடையில் வர்ணமின்றி வாகனஓட்டிகள் தடுமாற்றம்

கரூர், மே 21:  கரூர் தாலுகா அலுவலகம் அருகே வேகத்தடையால் ஏற்படும்விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ஜவகர் பஜார் தாலுகா அலுவலகம் முன்புறம் உள்ள சாலையில் வேகத்தடைஅமைக்கப்பட்டது. வேகத்தடைஅமைக்கப்பட்டபோது ஒளிஉமிழும் வர்ணம்பூசப்பட்டது. பின்னர் அது அழிந்துவிட்டது. எனினும் மீண்டும் வர்ணம்பூசி பராமரிக்கவில்லை. இதனால் இரவுநேரங்களில் வரும் வாகன ஓட்டிகள்வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். பலர் இருசக்கரவாகனத்தில் இருந்து விழுந்துஎழுந்து செல்கின்றனர். விபத்துக்கு வழிவகுக்கும் இந்த சாலையில்உள்ள வேகத்தடைக்கு வர்ணம்பூச வேண்டும்என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Taluk ,office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்